குளத்தில் நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி - யாழில் சம்பவம்

குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரிழ் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் மாலை இடம்பெற்றது.
அதே இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசன் குலேந்திரன் (வயது – 34) என்பவரே உயிரிழந்தார்.
குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை குளத்துக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அவரைக் காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர். இந்தநிலையில், அவர் நேற்றுப் புதன்கிழமை மாலை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

No comments