நுணாவிலில் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் - வீதியில் பயணித்த பொலிஸார் ஒருவர் காயம்
கதிர்காமத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் மீது இன்று காலை சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment