தமிழர்கள் கவனம்:மேஜர் ஜெனரல் தர்சன!


தமிழர்கள் அமைதியான வாழ்வை வாழ வேண்டும். இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், தமிழர்கள் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி எச்சரித்துள்ளார்.

காவல் துறையை சேர்ந்தவர்களும் . இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வருமென தெரிவித்துள்ள அவர் அதேபோல இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் இக்கருத்து அனைத்து தரப்பினரிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோசன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

No comments