ஜனாதிபதியின் உத்தரவுப்படியே செயற்படுவோம் - பொலிஸ் மா அதிபர்


ஜனாதிபதியின் உறுதிப்படுத்தப்பட்ட ஆலோசனைக்கும் உத்தரவுக்கு அமையவே பொலிஸ் திணைக்களம் செயற்படும்  என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (07)  நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


சட்ட ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் செயற்படுவதன் காரணமாக, ஜனாதிபதியினால் விடுக்கப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பொலிசார் செயற்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் (05) திகதியிடப்பட்டு,  முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வினால் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்ற ஒன்றாகவே கருதுவதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

No comments