துப்பாக்கி முனையில் நினைவேந்தல் தடுப்பு!

வடமராட்சியின் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர் தின  நினைவேந்தல் நிகழ்வு காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் அங்கு திரண்டிருந்த மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை சுப்பர் மடத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகளின் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் அதனை குழப்பியடித்த பருத்தித்துறை காவல்துறையினர்;,துப்பாக்கி முனையில் மக்களை விரட்டியடித்துள்ளதாக ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ் நிலை தொடர்கின்றது.

ஏற்கனவே மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகைள தடை விதிக்க பல தடவைகளாக முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments