கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவுட் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு அமைதி வணக்கம் செலத்தப்பட்டு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேநேரம் மாவீரர்களின் நினைவாக குருதிக்கொடை நிகழ்வும் கிழக்குப் பல்கலைக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

#Eastern University of Sri Lanka




No comments