வடமாகாணசபை சொத்துக்களை சுருட்டிய உறுப்பினர்கள்?


வடமாகாணசபையின் ஆயுட்காலம் நாளை செவ்வாய்கிழமையுடன்  காலாவதியாகின்றது.இந்நிலையில் பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் தம் வசமுள்ள உடமைகளை கையளிக்க அக்கறையற்றிருப்பது தொடர்பில் மத்திய கணக்காய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்கள் மக்களிற்கு சேவையாற்ற ஏதுவாக அலுவலகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.அவ்வலுவகங்களிற்கு கணணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுமார் 16மில்லியன் செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக சுமந்திரன் அணியினை சேர்ந்த சயந்தன் உள்ளிட்டவர்கள் ஏசி வசதிகளை பொருத்தியிருந்தனர்.அதனையே தன்னிடம் வரும் வழக்கு விவகாரங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களை சந்திக்க சயந்தன் பயன்படுத்திவருகின்றார்.

இந்நிலையிலேயே அவ்வாறு 16மில்லியனிற்கு வழங்கப்பட்ட அரச சொத்தினை வீடு செல்லும் மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் மீள அறவிடப்பட்டிருக்கவில்லையென மத்திய கணக்காய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்ட கார் பெமிட் விற்பனை மூலம் வருமானத்தை பார்த்துக்கொண்ட உறுப்பினர்கள் மாதாந்தம் நான்கு இலட்சத்திற்கும் குறையாத வருமானத்தை பெறுகின்றனர்.அமைச்சர்கள்,அவைத்தலைவர் வருமானம் அதனை விட அதிகமாகும்.

இந்நிலையில் முதலமைச்சர் தன் வசமுள்ள உடமைகளை கையளித்துவிட்ட நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் தம் வசமுள்ள உடமைகளை கையளிக்க அக்கறையற்றிருப்பது தொடர்பில் மத்திய கணக்காய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

No comments