வலிசுமந்த மற்றொரு தாயாரும் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி அலைந்து இறுதியாக தன் இன்னுயிரை தாரை வார்த்துள்ளார் மற்றுமொரு தாய்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நபரின் தாய் ஜெசிந்தா பீரீஸ் என்ற தாயே  காலமாகிவிட்டார். அவரிற்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். 

கடந்த கிழமை வழக்கிற்கு வந்து சென்றார்.  அடுத்த தவணைக்கு வரமாட்டேன்.எனது வழக்கை பாருங்கள் என்று கூறியது இன்னும் எமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறதென செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் தனது கணவனையும் மகனையும் தேடி தேடி களைத்து இன்று அதிகாலை 7.00 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் இறந்து உள்ளார். 

No comments