ஈபிடிபி இப்போது துரோகியில்லை:விக்கினேஸ்வரன்!


பொருளாதார ரீதியாக நாங்கள் வடக்குக் கிழக்கைக் கவனித்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூற இந்த செயலணியைப் பாவித்து வருகின்றது என்பதை எமது நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உணராதிருப்பது விந்தையாக உள்ளதென வடக்கு முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

சம்பந்தன் தன்னால் எழுதப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,சிவசக்தி ஆனந்தன்  தவிர்ந்த,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் கலந்துள்ளமை பற்றி பதிலளித்துள்ள முதலமைச்சர் அது தனக்கு சந்தோ~ந்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு மட்டுந்தரப்பட்ட ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரவிருத்தி சம்பந்தமான சலுகையை நான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தாரைவார்த்துக் கொடுத்துவிட்டேன் என்று தெரிகின்றது. இதன் போது எமது அரசியல் கருத்து வேறுபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. எதனைக் கூறச்சிரமப்பட்டேனோ அதனை இந்த நிகழ்வு தெட்டத் தெளிவாக்கிவிட்டது.

முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்யவேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூறியபோது அதனை எதிர்த்தவர்கள் எமது கட்சியினர் தான். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தவர்களும் அவர்கள் தான். அந்தத் “துரோகி”களுடன் தான் இப்போது எமது கட்சியினர் உள்;ராட்சி சபைகள் பலவற்றில் கூட்டு வைத்துள்ளனர். பொருளாதாரவிருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருத்திருந்திருந்தால் நாங்கள் மற்றவர்கள் அரசாங்கத்தின் ஊடாகப்பொருளாதாரவிருத்தியைப் பெறுவதை தடைசெய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது. மாகாணசபை கலைய இரண்டு மாதங்கள் உண்டு. பாராளுமன்றம் கலைய 2 வருடங்கள் உண்டு. இந் நிலையில் செயலணியை நியமித்து செயலாற்ற முன்வந்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்று தெரிகிறது. அதேபோல் அதில் சேர்ந்து செயலாற்றஎம்மவர்கள் முன்வந்திருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என்று தெரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் கட்சி அரசியல் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு வேகமாக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத் தரமுடியும் என்பதே எனது கரிசனை. நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினருடன் சேர்ந்த தெற்கத்தையப் பெரும்பான்மையினரின் செயலணி ஒரு அரசியல் செயல்பாடே என்று கூறி எமக்கு அரசியல் தீர்வேதற்போது முக்கியமென்ற கருத்தை முன்வைத்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பலமற்றநிலையும் தமிழ் மக்களின் உரித்துக்களை வழங்க அரசாங்கம் பின்னிற்கும் பாங்கும் வெளிக் கொண்டு வரப்பட்டிருப்பன. ஊலக நாடுகளில் இதை எடுத்துக்காட்டியிருக்கலாம். தற்போது தம்மைத் தாழ்த்தி என்னை ஏற்றிவிட்டிருக்கின்றார்கள் எனது கட்சியினர்.

எமது கொள்கை ரீதியான வேறுபாடுகள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. உடனே அரசியல் தீர்வுஅவசியம் என்று கூறிய எனது வாசகம் சம்பந்தன் அவர்கள் இந்த வருட முடிவுக்கு முன்னர் அரசியல் தீர்வு என்று கூறியதன் பிரதிபலிப்பேயாகும். இப்போது அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொருளாதாரவிருத்தியும் எம்மவர் கைவசம் இருக்கப் போவதுமில்லை.செயலணியின் 46 பேரே காய்களை நகர்த்துவார்கள்.

ஆனால் ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்கள் ஒருதலைப்பட்சமான பொருளாதாரவிருத்திகளை உங்களுக்கு வேண்டுமென்றால் செய்து கொண்டுபோங்கள்.ஆனால் என்னை அதற்குள் உள்நுழைக்காதீர்கள் என்றே கூறியிருந்தேன். பொருளாதாரப் பயன்களைக் காட்டி எமது அரசியல் தீர்வைத்தாமதப்படுத்துவதே அரசின் எண்ணம். அத்துடன் பொருளாதாரரீதியாக நாங்கள் வடக்குக் கிழக்கைக் கவனித்துவருகின்றோம் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூற இந்த செயலணியைப் பாவித்து வருகின்றது என்பதை எமது பாராளுமன்ற அங்கத்தவர்கள் உணராதிருப்பது விந்தையாக உள்ளது. 

முதற்கூட்டத்திலேயே ஜனாதிபதி முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கப் பார்த்தார். அதனால்த்தான் அன்றே விபரங்கள் எடுத்து அடுத்த நாள் ஊடகங்களில் சிங்கள குடியேற்றம் உண்மையில் நடந்துள்ளதென்பதை அனுமதிப் பத்திரமொன்றைப்பிரசுரித்ததால் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டினேன். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை உதாசீனம் செய்திருப்பினும் காணிகள் சம்பந்தமான சம்பந்தன் அவர்களின் கூற்றை ஜனாதிபதிக்கு மெய்ப்பிக்கவே இந்த உடன் நடவடிக்கையைஎடுத்தேன். 

நான் செயலணியில் பங்குபற்றினாலும் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்குமேல் பங்குபற்றமுடியாது. ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்குள்ளேயே எமது சிந்தனைகள் எவ்வாறு அமைகின்றன என்று கணிக்க இந்த விடயம் அனுசரணையாக அமைந்துள்ளது. அந்த அளவில் எனக்குமகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார். 

No comments