வடமாகாணசபை கூட்டத்தை விட திருமணவீடு மேலானது?

தற்போதுள்ள சூழலில் வடமாகாணசபை அமர்வில் பங்கெடுப்பதை விட திருமண வீட்டிற்கு செல்வது சிறந்ததென வடமாகாணமுதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30ந் திகதிய மகாணசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாது தனது அமைச்சில் பதவி வகிக்கும் ஒரு அலுவலரின் திருமணத்திற்குச் முதலமைச்சர் சென்றதை குற்றமாகக் காட்ட தமிழரசினர் முனைந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் திருமணம் என்பது வாழ்க்கையில் அதுவும் தமிழர்கள் மத்தியில் பொதுவாக ஒருமுறையே வரும். மாகாணசபைக் கூட்டம் ஒரு மாதத்திற்கு இரு முறைவரும். இதை உணராதவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் போலும் என தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடமாகாணசபையினை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றஞ்சுமத்தும் மையமாக தமிழரசு தரப்பு மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments