நாயாறில் விரட்டப்பட்ட நிலஅளவையாளர்கள்!


முல்லைதீவின் நாயாற்றில் சத்தம் சந்தடியின்றி இன்றைய தினம் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்க ஏதுவாக அளவீட்டிற்கு வந்திருந்த நிள அளவையிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் விகாரைக்கான காணிகளை அளவீடு செய்யவந்தவர்களே இன்று மீண்டும் மக்களால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித அறிவிப்புமின்றி வருகை தந்து அளவீட்டில் ஈடுபட்ட நிலஅளவையாளர்களே அங்கு திரண்ட பிரதிநிதிகளாலட விரட்டப்பட்டுள்ளனர்.

அரச பணிகளை தடுப்பதாக நிலஅளவையாளர்கள் கருத்து வெளியிட மக்களை சீற்றங்கொள்கின்ற காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிடாவிடின் மோசமான பின்விளைவுகள் ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 

No comments