1000 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக பேயக்ஸ் திரைச்சீலை ஓவியம் இங்கிலாந்திற்கு வந்துள்ளது
கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பேயோ திரைச்சீலை, முதல் முறையாக ஐக்கிய ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ளது.
வடக்கு பிரான்சில் உள்ள ஒரு இரகசிய இடத்திலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட திரைச்சீலை ஓவியம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் காட்சிக்கு வைக்கப்படும்.
இந்த திரைச்சீலை ஓவியம் 70 மீட்டர் நீளம் உடையது. 11 ஆம் நூற்றாண்டின் இந்த எம்பிராய்டரி, 58 காட்சிகளில், 1066 ஆம் ஆண்டில் நடந்த ஹேஸ்டிங்ஸ் போர் மற்றும் இங்கிலாந்தின் நார்மன் படையெடுப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது. அந்தத் தருணம்தான் நாட்டை என்றென்றைக்குமாக மாற்றியது.
அலுமினியச் சட்டத்தால் சூழப்பட்டு, கனமாகத் தோற்றமளித்த அந்தப் பெட்டியானது, இங்கிலாந்துக்கான பிரெஞ்சுத் தூதர் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் பாரவூர்த்தியிலிருந்து கீழே இறக்கப்பட்டது.
நாங்கள் சற்றுமுன் மிகவும் அசாதாரணமான ஒன்றைக் கண்டோம். அது, பேயோ தரைவிரிப்பு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு வந்தடைவதாகும். ஆனால் குறிப்பாக, அது கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இங்கிலாந்திற்குத் திரும்புகிறது என பிரித்தானிய அருங்காட்சியகத்தின் இயக்குநரான நிக் கல்லினன் கூறினார்.
இதைக் காண்பதற்கு மட்டுமல்ல, இதன் ஒரு பகுதியாக இருப்பதற்கும் இது ஒரு மிக அற்புதமான விடயமாகத் தோன்றுகிறது. மேலும் இதை முடிந்தவரை பலருடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.
இந்தக் கடன் நம்பிக்கையின் வெளிப்பாடு, நீண்டகால நட்பின் உறுதியான வெளிப்பாடு மற்றும் பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் தங்கள் எதிர்காலத்தை இணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நமது பகிரப்பட்ட விருப்பத்தின் அடையாளம் என்று டைம்ஸ் பத்திரிக்கையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பிரான்சில், மிகவும் எளிதில் சேதமடையக்கூடியதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு கலைப்படைப்பு 300 மைல்களுக்கும் அதிகமான தொலைவிற்கு இரவல் கொடுக்கப்படவிருப்பது குறித்து ஒருவித கலக்கம் நிலவி வருகிறது. இதைத் தடுக்கக் கோரிய ஒரு பிரெஞ்சு மனு இதை ஒரு பாரம்பரியக் குற்றம் என்று குறிப்பிட்டது.


Post a Comment