முதியவர் படுகொலை - ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது


தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். 

குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தங்காலை பொலிஸார் , முதியவரின் இளைய மகனான ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, அதீத போதையில் காணப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments