கொழும்பில் விளையாட்டு: உள்ளே? வெளியே??

 


முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபகவை, சில மணிநேரங்களிலேயே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் , யோசித ராஜபக்சவை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணை முடியும் வரை அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனிடையே 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

முன்னதாக மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முறையாகக் கட்டமைக்கப்படாத காரணத்தினால், வழக்கினை நாளைக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments