புத்தர் சிலை:என்ன விலை!
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் ஆஜராகி, சட்டவிரோத கட்டுமானம் தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அதன்படி, தலா 25,000 ரூபாய் அபராதம் செலுத்திய அவர்கள், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட 10 பேரும், புதிதாக ஆஜரான 3 பேரும் உட்பட மொத்தம் 13 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர். மேலும், வழக்குடன் தொடர்புடைய இரு நபர்கள் அடுத்த கட்ட விசாரணையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Post a Comment