ஆங்கிலக் கால்வாயை படகில் கடக்கும் முயற்சியில் 4 பேர் பலி: 37 உயிருடன் மீட்பு!
வடக்கு பிரான்ஸ் கடற்கரையில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்காக ஒரு படகில் ஏற முயன்றபோது நான்கு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் ஒரு வாட்டர் டாக்ஸியில் ஏற முயன்றபோதுஇங்கு அபாயகரமானதாக இருக்கக்கூடிய நீரோட்டங்கள் அவர்களை அடித்துச் சென்றதால் உயிரிழந்ததாக பாஸ்-டி-கலைஸ் மாகாண நிர்வாகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியது.
ஒருவருக்கு உடல் வெப்பநிலை குறைவுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும் 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
அந்தப் படகு சுமார் 30 பேருடன் இங்கிலாந்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இந்த மரணங்களைக் கேட்டு தாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்ததாக இங்கிலாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


Post a Comment