ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பல்களுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் - ஐ.ஆர்.ஜி.சி
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பல்களுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.
வளைகுடா நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் கடுமையாக தண்டிக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறம்பட நிர்வகிக்க ஐ.ஆர்.ஜி.சி கடற்படைக்கு முழு அதிகாரம் உள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பொதுமக்கள் கப்பல்கள் மட்டுமே அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் பகிர்ந்த ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு அமெரிக்கக் கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்ததாக இன்று முன்னதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்த கூற்றுகளையும் ஈரான் மறுத்துள்ளது.

Post a Comment