பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான் தொடர்ந்து போரிடும் - வெளியுறுவு அமைச்சர்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்
அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார்.தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார்.
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன்.
இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டன் ஒரு சமாதானத் திட்டத்தை முன்மொழிந்ததாகக் கூறிய பின்னரும், சண்டையை நிறுத்துவதற்கான ஈரானின் நிபந்தனைகள் குறித்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்தும் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பு வெளியானது.

Post a Comment