ஈரான் போரை முடிவுக்குக்கொண்டுவரு 15 அம்சத் திட்டத்தை ஈரானுக்கு அனுப்பியதா அமெரிக்கா?
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 நிபந்தனைகள் அடங்கிய திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் ஈரானிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் சேனல் 12, மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் அந்த முன்மொழிவு குறித்து செய்தி வெளியிட்டது.
அந்தத் திட்டம் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்குத் தெரிவிக்கப்பட்டது என நியூயார்க் டைம்ஸ் இரண்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளது .
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாக இரு அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில், இரு தரப்பினரும் 15 அம்ச ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைத்தல், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஆதரவுக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும் என்று சேனல் 12 கூறியது.
இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக செவ்வாயன்று, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் முன்வந்திருந்தது.

Post a Comment