பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள் ஈரானை வலியுறுத்திய மக்ரோன்
நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன்.
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோதே மக்ரோன் இதனைத் தெரிவித்தார்.
பதற்றத்தைத் தணிப்பதற்கு வழிவகுக்கவும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தை சீர்குலைக்கும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கட்டமைப்பை வழங்கவும், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்தேன் என்று மக்ரோன் செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் எழுதினார்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மீதான ஏற்றுக்கொள்ள முடியாத ஈரான் தாக்குதல்களை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை அந்தத் தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியதாகவும் பிரெஞ்சு அதிபர் தெரிவித்தார்.
மேலும் அவர், எரிசக்தி மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்குமாறும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை அனுமதிக்குமாறும் ஈரானைக் கேட்டுக்கொண்டார்.

Post a Comment