ஈரானின் பெரிய எரிவாயு வயலை அழித்தது இஸ்ரேல்
தனது சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
சவுத் பார்ஸ் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயுப் பகுதியின் ஒரு அங்கமாகும், மேலும் இப்பகுதியில் கத்தார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்கள் வசதிகளை இயக்கி வருகின்றன.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை கத்தார் ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது எனக் குறிப்பிடுகிறது இஸ்ரேல் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

Post a Comment