அனுரவிற்கு ஆட்டம்?
இலங்கையில் தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு புதிய பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்;.
அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நான்கு பெயர்களை முன்மொழிந்தார், மேலும் அரசியலமைப்பு சபை அதன் நிர்வாக அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தாததால் கணக்காய்வாளர் நாயகம் பதவி இன்றுவரை வெற்றிடமாக உள்ளதென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை அரசியலமைப்பு சபையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தரப்பு வலியுறுத்திவருகின்றது.
அரசியலமைப்பு சபையின் வாக்களிப்பின் போது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அரச ஆதரவு நபர்களிற்கே சி.சிறீதரனும் ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதனிடையே, புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

Post a Comment