அனுர தரப்பு பேசாமலிருக்கட்டும்:சீ.வீ.கே!

 


தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான சிவஞானம் சிறீதரன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழரசு உள்வீட்டு விவகாரத்தில் அநுர தரப்பு குத்திமுறிய தேவையில்லை எனவும் மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினரோ அல்லது ஜே.வி.பி கட்சியினரோ மட்டுமே நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அனுர அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்“ எனவும் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எம்.ஏ.சுமந்திரனோ தமது கட்சி தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண கூட்டங்களை புறக்கணித்திருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments