சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment