ஆளுக்கொரு சட்டம்?

 


வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் மீண்டும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் அழைப்பின் பேரில் அவர்கள் இன்று (09) விசாரணைக்காக முன்னிலையாகியிருந்தனர்.

நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வுpசாரணைக்கான அழைப்பு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கடந்த இருதினங்களுக்கு முன்பாக விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் இன்றையதினம் (09) காலை முன்னலையாகியிருந்தனர்..

விசாரணையின் போது எமது ஆலயம் சார்ந்த விடயங்களையும் மற்றும் எமது தனிப்பட்ட தகவல்களையும் கேட்டிருந்தனர்.

நாம் அனைத்திற்கும் பதில் அளித்திருந்தோம் அந்தவகையில் மதம் சார்ந்த பணிகளை முன்னின்று மேற்கொள்பவர்களை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

குறிப்பாக எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் எங்களை மாத்திரம் தொடர்ச்சியாக விசாரணை செய்கின்றனர்” என ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளனர்.


No comments