பாதுகாப்பு கேட்கின்றார் சஜித்:அருச்சுனாவும்?





இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை அதிபரிடம் கோரிக்கை விடுததுள்ளனர். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று (31.10.2025) காலை காவல்துறை அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை நீக்கியது அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் அடிப்படையிலாகும் என காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார். 

எனினும் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை காவல் அதிபருக்கு வழங்குவது சபாநாயகரால்  பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதிகளுக்கு எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது சவாலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி மன்ற கூட்டங்கள் மற்றும் பொது மக்கள் தினங்களை நடத்தத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிகழ்நிலை ஊடாக இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments