மின்கட்டணம் மீண்டும் ஏறுகின்றது?
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.
மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் கட்டண உயர்வு தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
இதனிடையே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படக் கூடாது என்றே பிரார்ததிக்கிறோம். அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம். இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும் தான் பாதிக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர். துன்பம், பசி, அடக்குமுறை மற்றும் அசௌகரியத்தால் மக்களை நசுக்கி, என்றுமே மக்களை அநாதவரவான நிலையில் வைத்துக் கொள்வதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளை தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 220 இலட்சம் மக்களினது உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் மேன்மை தங்கிய டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினது பங்கேற்புடன் இன்று (11) இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கற்கைகள் பீடமான இது, பதிவு செய்யப்பட்ட சகல வசதிகளையும் கொண்டமைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான விசேட பயிலரங்கும் இன்று இங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்ல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Post a Comment