வீடு புகுந்து இரு இளைஞர்களை கடத்தி சென்று துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு மறையவர் படுகாயம்


கஹவத்த,பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இருவரை கடத்திச் சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றைய தினம் இரவு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்

கடத்தி சென்ற இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும்  வெளிவரவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments