சிலர் மட்டுமே நேர்மையானவர்கள்:அனுர!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே அதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஜனாதிபதி மன்னிப்பு ஊழல் குறித்து கருத்து தெரிவிக்கையில் சில அதிகாரிகள் தவிர மற்ற அனைவரும் ஊழலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அனுர தெரிவித்துள்ளார்.
"சிறைச்சாலைத் திணைக்களம் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்து வருகிறது. சில காவல்துறை; அதிகாரிகள் இப்போது குற்றங்களைக் குறைப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளின் பாதுகாவலர்களாக மாறிவிட்டனர். போலி கடவுச்சீட்டுகளைத் தடுப்பதை உறுதி செய்ய வேண்டிய குடிவரவுத் திணைக்களம், இப்போது பாதாள உலகத் தலைவர்களுக்கு போலி பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது. வாகனங்களை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதற்குப் பொறுப்பான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இப்போது பணத்திற்கு ஈடாக ஊழலில் ஈடுபட்டுள்ளது. இதுதான் நாட்டின் நிலை," என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி பொது மன்னிப்புகளை ஜனாதிபதியே அங்கீகரிக்கிறார், ஆனால் வெசாக் பண்டிகைக்காக மன்னிப்பு வழங்க அனுமதிக்கப்பட்ட 388 கைதிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் கைதியின் பெயர் இல்லை என்பதை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment