புத்தர் வந்தது உண்மையே!



உகந்தை மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கவில்லையென அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ள நிலையில்  புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை தாயக செயலணி சிவில் சமூக அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் சிவில் சமூக பிரதிநிதிகள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக புத்தர் சிலை கட்டுமானம் தொடர்பில்  அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் த.பிரதீபன் அவர்களினால் வெளிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து விடயம் கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக அமைந்திருந்தது. 

இந்நிலையிலே அதன் உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பான தாயக செயலணி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் நேற்று திங்கட்கிழமை (09) உகந்தை மலை முருகன் கோவிலுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

பிரதேசம் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.அருகாமையில் உள்ள குடும்பிமலை தேரரினாலேயே புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. முதலில் மலையில் ஒரு வெள்ளைக் கொடியே பறக்க விடப்பட்டது, பின்னர் பௌத்த கொடி பறக்கவிடப்பட்டு ஒரு சில நாட்களில் புத்தர் சிலை அங்கு அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கடற்பபையினராலேயே முன்னெடுக்கப்பட்ட விடயம் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர


No comments