யாழ்.மாநகரசபை:மும்முனைப்போட்டி!



யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் தெரிவு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகள் தத்தமது சார்பில் பெயர்களை பிரேரிக்க தயாராகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மதிவதனியும் தமிழ் தேசிய பேரவை சார்பில் கிருஸ்ணகுமாரும் அதேவேளை தேசிய மக்கள் சக்தி சார்பில் கபிலனின் பெயரும் முன்மொழியப்படவுள்ளது

இதனிடையே பிரதிமுதல்வர் தெரிவின்போது தனக்கு ஆதரவு தருமாறு முன்னாள் பிரதிமுதல்வர் ஈசன், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய பேரவை சார்பில் பிரதி முதல்வர் பதவிக்கு முன்னாள் பிரதிமுதல்வர் ஈசன் பெயர் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளாமல் கட்சியின் மேலிடத்தோடு தொடர்புகொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர உறுப்பினர்கள் பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவில் பிரதான கட்சிகளை தாண்டி ஒரு சில ஆசனங்களை மட்டும் வைத்துள்ள தரப்புக்களே தீர்மானம் மிக்க சக்திகளாக மாறியுள்ளன.


No comments