மட்டக்களப்பில் புரட்டியது டெலோ!



மட்டக்களப்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது.தமிழரசுக் கட்சியின் தவிசாளராக த.கோபாலபிள்ளை அவர்களும் பிரதி தவிசாளராக த. டிசாந்த் அவர்களும்  தெரிவு செய்யப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழ் தரப்புக்களை வடகிழக்கில் சபைகளில் ஆட்சியிலமர ஒத்துழைப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ள நிலையில் அக்கூட்டில் அங்கம் வகித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளது.அதேவேளை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

முன்னதாக சங்கு, சைக்கிள் கொள்கை கூட்டு என்ற போலிக்கோசத்துடன் தமிழரசுக்கு எதிராக, தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக சதி முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதும் அம்முயற்சி தோல்வியிலேயே முடிவுற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மட்டக்களப்பு மாநகரசபையினை இலங்கை தமிழரசு கட்சி ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் கைபற்றியிருந்தது.மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் ,அவர்களும் பிரதி முதலாக வைரமுத்து தினேஸ்குமார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments