டில்வின் சில்வா வெளியே?



ஆட்சியேற்ற பின்னராக ஜேவிபி தலைமைகளிற்குள்ளான முறுகல் உச்சமடைந்துள்ளது.அமைச்சு மற்றும் தேசிய பட்டியலில் தனது சிபார்சுகள் தூக்கியெறிப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நீண்டகாலமாக கட்சிக்காக பணியாற்றிய நிலையில், மற்றுமொருவருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்தே பதவிகளிலிருந்து விலகி ஓய்வுவெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கட்சித் தகவல் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments