ஆயிரத்தோராவது தடவை?



இனப்பிரச்சினையினை தீர்த்து வைக்க ஆயிரத்தோராவது தடவையாக இந்திய தூதரிடம் தமிழரசுக்கட்சி கோரியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது. அதிலே அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும்; மாகாண சபைத் தேர்தல் உடன் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பிற்பாடு இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் பேசப்பட்டது. மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், மீனவர்களின் பிரச்சனைகள் பற்றியும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டதெனவும் சாணக்கியன் விளக்கமளித்துள்ளார்.


No comments