ஐ.நா பொதுச் செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைத் தடை விதித்தது இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்குள் அன்டோனியோ குட்டெரெஸ் நுழைவதற்கு அனுமதியில்லை என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் கூறினார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் கொடூரமான தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க முடியாத எவரும் இஸ்ரேலிய மண்ணில் காலடி வைக்கத் தகுதியற்றவர் என்று காட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பொதுச் செயலாளர் செயற்படுகிறார். ஈரான் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவற்றை குட்டெரெஸ் ஆதரிப்பதாகவும் காட்ஸ் குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ன்டோனியோ குட்டெரெஸ் கண்டிக்கவில்லை என இஸ்ரேல் கூறியது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் ஈரானின் தாக்குதலுக்குப் பின்னர் குடெரெஸ் பிராந்தியத்தில் வன்முறை அதிகரிப்பதைக் கண்டித்தார். அதில் ஈரானின் பெயரைக் அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு நுழையத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய கிழக்கில் பழிவாங்கும் வன்முறையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேல் மீது ஈரானின் நேற்றைய பாரிய ஏவுகணைத் தாக்குதலை நான் மீண்டும் கடுமையாகக் கண்டிக்கிறேன் என்று குட்டரெஸ் கூறினார். கொடிய வன்முறைச் சுழற்சி நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
Post a Comment