லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் இராணுவத்தினர் பலி!
தெற்கு லெபனானில் நடந்த சண்டையின் போது எட்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் குழுவின் மூத்த மூத்த தளபதிகளைக் கொன்று பல நாட்களின் பின் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.
இஸ்ரேலியப் படைகளை எதிர்த்து ஹிஸ்புல்லாப் போராளிகள் நடத்திய தாக்குதலில் 8 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் இஸ்ரேல் வான்படையின் உலங்கு வானூர்திகள் சம்பவ இடத்திற்கு வந்து ஏற்றிச் சென்றுள்ளன.
லெபனானில் நடந்த போரின் போது இராணுவக் குழுவின் தளபதி கேப்டன் எய்டன் இட்சாக் ஓஸ்டர் (22) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
சண்டையில் மேலும் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிசெய்தது இஸ்ரேலின் பாதுகாப்புப்படை. கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் இஸ்ரேலி வெளியிட்டது. கேப்டன் ஹரேல் எட்டிங்கர், கேப்டன் இட்டாய் ஏரியல் கியாட், மேஜர் நோம் பார்சிலாய், மேஜர் ஆர் மன்சூர், மேஜர் நெசர் இட்கின், சார்ஜென்ட் அலம்கான் தர்ஃபா மற்றும் சார்ஜென்ட் இடோ ப்ரூயர் என்று பெயரிட்டனர்.
Post a Comment