புலம்பெயர் காசு:முருகன்,அருச்சுனா பாகுபாடு!

 


புலம்பெயர் தரப்புக்கள் கண்டுகொள்ளாத நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.லண்டனில் உள்ள தனது மகளிடம் செல்வதற்கான உதவியை அவர் கோரியதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே புலம்பெயர் பணத்தில் தனக்கு தானே வினை விதைத்துக்கொண்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இ.அர்ச்சுனா, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தில் அனுமதி பெற்று, பெண் சட்டத்தரணியொருவர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்தியர் அர்ச்சுனாவிடம் வேட்புமனுவில் கையெழுத்து பெற்றார்.  அனேகமாக சுயேச்சை அணியில் அவர் களமிறங்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments