அதானிக்கு ஆப்படிக்கவில்லை!



இலங்கையின் புதிய அரசாங்கம், அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகக் கூறியபோதிலும் சர்ச்சைக்குரிய விடயங்களை தற்போது கையிலெடுக்கப்போவதில்லையென அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் செவ்வாயன்று அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் நவம்பர் 14ல், நாடாளுமன்ற தேர்தல் நடந்த பின், புதிய அரசு, முடிவு எடுக்குமென தெரிவித்துள்ளார்.

அதானி பசுமை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments