திசைகாட்ட வேட்பாளர் தேவையாம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை வலைவீசி தேடிவருகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் .போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.
இதனிடையே கிளிநொச்சியிலும் பொறியியலாளர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சக்தி ஆட்சி பீடமேறியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக மாற்றமொன்று நிகழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யுhழ்ப்பாணத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மட்டக்களப்பில், இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக மாற்றமொன்று நிகழ வேண்டும் என முன்னாள் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment