அனுர விதிவிலக்கல்ல!



போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற பின்னிற்கப்போவதில்லையென அனுரதிசநாயக்க அரசும் உறுதிபூண்டுள்ளது. ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த அறிக்கைகள் மூலம் புதிய அரசின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது. புதிய அரசின் அமைச்சரவையில் இலங்கை அரசின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.அத்துடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்,தீர்மானத்தை நிராகரித்துமுள்ளது.அத்துடன் உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் புதிய அரசும் படைதரப்பின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கின்ற அரசாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


No comments