ஈரானில் சுரங்கத்தில் வெடி விபத்து: 51 தொழிலாளிகள் பலி!
ஈரானின் கிழக்குப் பகுதியில் நடந்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. இந்த வெடிவிபத்து சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டது.
மதன்ஜூ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தொகுதிகளில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது 60 தொழிலாளர்கள் உள்ளே இருந்துள்ளனர். சுரங்கத்தில் இருந்து வேலை சீருடையில் இறந்தவர்கள் வெளியே எடுக்கப்படும் காட்சிகள் ஈரானில் ஒளிபரப்பப்பட்டன.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
Post a Comment