பிரேசிலில் இழுத்து மூடப்பட்டது எக்ஸ் தளம்!


எலோன் மஸ்க்சின் எக்ஸ் (ருவிட்டர்) தளத்திற்கு பிரேசில் நாடு தடை விதித்துள்ளது.

அத்துடன் ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு அதன் அப்ளிகேஷன் ஸ்டோர்களில் இருந்து எக்ஸ் செயலியை அகற்றவும், iOS மற்றும் ஆண்ட்ராய்டு சிஸ்டங்களில் அதன் பயன்பாட்டைத் தடுக்கவும் ஐந்து நாள் காலக்கெடுவை நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவு வழங்கியுள்ளார்.

அனைத்து நீதிமன்ற உத்தரவுகளுக்கும் இணங்கும் வரை மற்றும் ஏற்கனவே உள்ள அபராதங்களை செலுத்தும் வரை சமூக ஊடக தளத்தை உடனடி மற்றும் முழுமையான இடைநீக்கம் செய்ய நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

தளத்தை அணுக VPNகள் (மெய்நிகர் தனியார் நெட்வொர்க்) போன்ற வழிகளைப் பயன்படுத்தும் நபர்கள் அல்லது வணிகங்களுக்கு R$50,000 (£6,700) அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

தவறான தகவலை பரப்பியதற்காக டஜன் கணக்கான எக்ஸ் கணக்குகளை இடைநீக்கம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

சுதந்திரமான பேச்சு ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார் என்ற எலோன் மக்ஸ் குற்றம் சாட்டினார்.

சமூக ஊடக வலையமைப்பு நாட்டின் 200 மில்லியன் மக்களில் குறைந்தது 10ல் ஒரு பகுதியினரால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலைக்குள் சில பயனர்கள் பிளாட்ஃபார்மிற்கான அணுகல் சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் எக்ஸ் தளம் பிரேசிலில் உள்ள தனது அலுவலகத்தை மூடியது.

எக்ஸ் தளத்தின் பிரேசில் பிரதிநிதி தணிக்கை என்று விவரிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து எக்ஸ் தனம் தனது பிரேசில் அலுவலகத்தை மூடியது.

முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் பல ஆதரவாளர்கள் - தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட எக்ஸ் கணக்குகள் விசாரணையின் போது தடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி மொரேஸ் உத்தரவிட்டிருந்தார். ஏதேனும் கணக்குகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டால் நிறுவனத்தின் சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாவார்கள் என்றார்.

அத்துடன் இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்ததற்காக எக்ஸ் தளத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

தளத்தை இடைநிறுத்தப் பணிக்கப்பட்ட பிரேசிலின் தொலைத்தொடர்பு ஏஜென்சியின் தலைவர் அவ்வாறு செய்ய இணக்கத்துடன் தொடர்கிறேன் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments