யேர்மனி சீகன் நகரில் கத்திக்குத்து: 6 பேர் காயம்!!
யேர்மனியின் மேற்குப் பகுதியில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆறு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சீகன் (Siegen) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
நகர திருவிழா ஒன்றுக்காகச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 40 பேர் இருந்துள்ளனர்.
தாக்குதலாளி 32 வயதுடைய யேர்மன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெண் எதற்காக கத்திக்குத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். இது தீவிரவாத தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்கள் அல்லது ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று யேர்மனி குடிமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நகரிலும் ஈழத்தமிழர்கள் கணிசமான அளவு வாழ்ந்து வருகின்றனர்.
Post a Comment