சுவிஸ் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்! தேடிவருவதாக காவல்துறை அறிவிப்பு!
சுவிட்சர்லாந்து - யேர்மனி எல்லையில் அமைந்துள்ள பாசல் (Basel) பாஸ்லர்கட் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கடுமையான குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட அல்ஜீரியர் மற்றும் துனிசியன் நாட்டைச் சேர்ந்த இருவர் குறித்த சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாசல் சிறையிலிருந்து இவ்விருவரும் எப்படி வெளியே தப்பிச் சென்றனர் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விருவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற அல்ஜீரிய நாட்டவருக்கு 37 வயது என்றும் இவர் கொலை மற்றும் கடுமையான உடல் காயங்கள் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
துனிசிய நாட்டவருக்கு 22 வயதும் என்றும் இவர் சொத்துக்களுக்கு தேசம் விளைவித்தாக சிறையில் அடைக்கபட்டார். அத்துடன் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இரண்டு பேரும் தப்பியோடிய பாஸ்லர்கட் சிறை யேர்மனியின் எல்லையில் அமைந்துள்ளது .
தப்பியோடியவர்களை சர்வதேச அளவில் காவல்துறையினர் தேடி வருவதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment