57 தொன் இறந்த மீன்கள் அகற்றியது கிறீஸ்: அவசரகால நிலை அறிவிப்பு!
கிறீஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான நன்னீர் மீன்கள் இறந்ததையடுத்து, கிறீஸின் மத்திய துறைமுக நகரமான வோலோஸில் இன்று சனிக்கிழமை ஒரு மாத அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.
இறந்த மீன்களைச் சுத்தம் செய்ய அதிகளவான பணம் மற்றும் ஏனைய ஆதரவுகளை வழங்க கிறீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கடந்த ஆண்டு கிரீஸின் மத்திய தெசலி பகுதியை தாக்கிய பேரழிவுகரமான வெள்ளத்தின் விளைவாக நன்னீர் மீன்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரியின் நீர் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வோலோஸ் துறைமுகத்தை நோக்கி மீன்கள் செல்கின்றன. இது பகாசெடிக் வளைகுடா மற்றும் ஏஜியன் கடலுக்குள் செல்கிறது.
நன்னீர் மீன்கள் உப்பு நிறைந்த கடல் நீரை வாழ முடியாத. மேலும் ஆயிரக்கணக்கான மீன்கள் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நீரை அடைத்துவிட்டன. இதனால் மீன்களின் இறப்பு அதிகரிக்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை மட்டும், வோலோஸ் அருகே கடற்கரைகளில் 57 தொன் இறந்த மீன்களை அதிகாரிகள் அகற்றினர்.
உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளின் உள்ளூர் சங்கத்தின் படி, கடந்த ஆண்டு வெள்ளத்தில் இருந்து இப்பகுதிக்கான சுற்றுலா கிட்டத்தட்ட 80% சரிந்துள்ளது.
Post a Comment