பிரதமராக விஜித ஹேரத் ?
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக விஜித ஹேரத் அல்லது ஹரிணி அமரசூரிய ஆகிய இருவரில் ஒருவரே நியமிக்கப்படுவர் என அறிய முடிகிறது.
அனுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அனுரவின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சுகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அமைச்சுகள் செயலாளர்கள் ஊடாக நிர்வகிக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கூறியிருந்தார்.
Post a Comment