மான்செஸ்டர் விமான நிலையத்தில் காலால் உதைக்கும் காவல்துறையினர்

பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் காவல்துறையினர் பாக்கிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் உதைக்கும் காணொளி

சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரையில் விழுந்து படுத்திருக்கும் குறித்த இளைஞரை நோக்கி காவல்துறையினர் மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகளும் காட்டப்பட்டன. அத்துடன் ஒரு இளைஞனின் தலையில் இராணுவ காலணியால் உதைக்கும் காட்சியும் மற்றர் மீது தொடையில் மிதிக்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளன.

இதேபோன்று மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் பீச்சி அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது.

ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுகிறார்.

காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன  எனக் கூறப்பட்டுள்ளது. பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட காணொளியில் காணப்படும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முன்னணி பணிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலிற்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் பொலிசின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான டல் பாபு தெரிவித்துள்ளார். 


No comments