ஜனாதிபதி தேர்தலில் விஜயதாசவும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்றையதினம் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
நேர்மையான நாடு, சுதந்திரமான நாளை, பசுமை தேசம், புதிய பாதையை அடைய நாம் பாடுபட வேண்டும் எனவும், அதை வழிநடத்துவதில் முன்னோடியாக இருக்க தாம் தயாராகவுள்ளோம்.
இந்தியாவின் அசோகப் பேரரசரால் நிறுவப்பட்ட டெம் எனும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சவே முனிசா பிரஜா’ எனும் பாளி வசனத்தில் குறிப்பிடுவது போல், நாட்டின் ஆட்சியாளர் தமது நாட்டு மக்களை பிள்ளைகள் போல் பராமரிக்க வேண்டும் விடயத்திற்கு மதிப்பளித்து, அதனை யதார்த்தமாக்குவதற்கு தாம் எடுத்துள்ள முயற்சிக்கு உங்கள் ஆசிர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்.
2024 ஜனாதிபதித் தேர்தல் நம் அனைவரின் எதிர்கால தலைவிதியையும் தீர்மானிக்கும் திருப்புமுனையாக அமையும் , தாய்நாட்டின் நிலைப்பு அல்லது அழிவை தீர்மானிக்கும் காரணியாக உங்கள் வாக்கு இருக்கும்.
உங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையை நீங்கள் அரசியல்வாதிகளிடம் விட்டுவிட்டதால் இன்று நாம் அனைவரும் ஒரு சோகமான சூழ்நிலையில் இருக்கிறோம்.
உலகம் மாறுவதை நீங்கள் விரும்பினால், உங்களைத் தவிர வேறு யாராலும் அதனை மேற்கொள்ள முடியாது, இலங்கை அரசின் வெற்றிக்காகவும், இலங்கை தேசத்தின் வெற்றிக்காகவும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன் என தெரிவித்தார்.
இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment