கனடாவின் ஜாஸ்பர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ பரவியது

ஜாஸ்பர் தேசிய பூங்காவில் உள்ள எண்ணெய்க் குழாயில் காட்டுத் தீ பரவியதால், அதை பாதுகாக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

ஈடுபட்டுள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏற்கனவே அப்பகுதியில் இருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

புதன்கிழமையன்று கனடாவின் ஜாஸ்பர் நகரத்தை காட்டுத்தீ அடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பூங்கா குறிப்பிடத்தக்க இழப்பை அறிவித்தது, ஆனால் சேதத்தின் அளவை இன்னும் கணக்கிட முடியவில்லை.

டிரான்ஸ் மவுண்டன் பைப்லைன் எட்மண்டனில் இருந்து வான்கூவர் வரை ஜாஸ்பர் தேசிய பூங்கா வழியாக செல்கிறது.

இது கனடிய ராக்கீஸில் மிகப்பெரியது. 1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக, இந்த பூங்கா ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

கிடைக்கும் அனைத்து தேவையான வளங்களையும் திரட்டி வருகின்றனர் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

நாங்கள் கனேடிய ஆயுதப்படை வளங்கள், வெளியேற்ற ஆதரவு மற்றும் அவசர காட்டுத்தீ ஆதாரங்களை உடனடியாக மாகாணத்திற்கு அனுப்புகிறோம். நாங்கள் தீயணைப்பு மற்றும் விமான உதவியை ஒருங்கிணைத்து வருகிறோம். ஆல்பர்ட்டா, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

அண்மைய காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவது வழமையாக உள்ளது . 2023 இல் பதிவு செய்யப்பட்ட காட்டுத் தீ காரணமாக கனடா முழுவதும் 235,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments