கோத்தா இல்லை:கஸ்ட காலம்!
கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற போது உத்தரவிட்ட விடயம் சர்ச்சைளை தோற்றுவித்துள்ளது கொழும்பில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணி 2019 ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி 12 பில்லியன் ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்துடன், அனுமதிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறாது வேறு நிபந்தனைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டுள்ளது.
குறித்த காணியை பணிப்பாளர் சபையின் உத்தியோகப்பூர்வ அனுமதியின்றி குத்தகைக்கு வழங்கியதன் காரணமாக அதிகாரசபைக்கு 330 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Post a Comment